districts

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு இஸ்லாமியர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்/புதுக்கோட்டை,  ஜூலை 23-  

     பாஜக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கம்  கொலை வழக்கு தொடர்பாக, ஞாயிறன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் என்ஐஏ அமைப்பி னர் 10 இடங்களில் உள்ள இஸ்லாமியர் களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராம லிங்கம் (45). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு  பிப்.5 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து திருவிடை மருதூர் காவல்துறையினர் விசாரித்து வந்த  நிலையில், இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப் பட்டது. இந்த வழக்கில் 18 பேர் குற்றவாளி களாக கருதப்பட்டு, 13 பேர் கைது செய்யப் பட்டனர்.

    இதில் இருவர் ஜாமீனில் வெளியே  வந்த நிலையில், 11 பேர் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் 5 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக என்ஐஏ  அறிவித்து, அவர்களை கண்டுபிடித்து தரு பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறி வித்தது.

   இந்நிலையில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகப்படுபவர்களின் வீடுகள், தேடப்படும் குற்றவாளிகளின் வீடு களில் ஞாயிற்றுக்கிழமை என்ஐஏ சோதனை  நடத்தியது. இதில் என்ஐஏ அமைப்பின் டிஎஸ்பி ஆர்.கே.பாண்டே தலைமையில் 5  பேர் கொண்ட குழுவினர், தஞ்சாவூர் நடராஜ புரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளர் பக்ரூ தீன் என்பவர் வீட்டில் ஞாயிறன்று அதிகாலை  5.30 மணி முதல் காலை 10.15 மணி வரை சோதனை நடத்தினர்.  

    சோதனையின் போது உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்புக்காக வெளியே நிறுத்தப்பட்டனர். பின்னர் பக்ரூதீன் வீட்டி லிருந்து ஒரு செல்போன், இரண்டு பென் டிரைவ்களை பறிமுதல் செய்து என்ஐஏ அதி காரிகள் எடுத்துச் சென்றனர்.

     அதேபோல் அதிராம்பட்டினம் தரகர் தெருவில் உள்ள ஹாஜா அலாவுதீன் என்ப வரது வீட்டிலும், கும்பகோணம் அருகே திரு வாய்ப்பாடியில் முகமது செரீப், திருமங்கல குடியில் உள்ள குலாம் உசேன், ராஜகிரியில்  உள்ள முகமது பாரூக் ஆகியோரது வீடு களிலும் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர் பாக சோதனை நடத்தினர்.

     மேலும், ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளான திருபுவனம் முகமது அலி ஜின்னா, கும்பகோணம் மேலக் காவேரி அப்துல்மஜீத், திருமங்கலகுடி நபீல் ஹாசன், சாகுல்ஹமீது, வடக்குமாங்குடி புருகாதீன் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ  அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    என்ஐஏ அதிகாரிகள், தஞ்சாவூர் மாவட்டத் தில் 10 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியபோது, அந்தப் பகுதிகளில் ஏதேனும்  அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதுக்கோட்டை

    புதுக்கோட்டை நகரப் பகுதிக்குட்பட்ட உசிலங்குளம் 8-வது வீதியில் வசிப்பவர் ரஷீத்  முகமது. அரசால் தடை செய்யப்பட்ட இவரது  வீட்டிலும் 3 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அதிகாலை 5.15  மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை காலை 10.45 மணிக்கு நிறைவடைந்தது. சோத னையில் என்ன கைப்பற்றப்பட்டது என்பது போன்ற தகவல் எதையும் அவர்கள் தெரி விக்கவில்லை.