districts

img

திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் ஆலய கும்பாபிஷேகம் விஐபி-கள் மட்டுமே காண அனுமதி: உள்ளூர் மக்களுக்கு அனுமதி மறுப்பு

மயிலாடுதுறை,  மார்ச் 27 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஷ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக திருவிழா ஞாயிறன்று நடைபெற்றது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கோயில் பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்து முடிந்தது. உள்ளூர் மக்களுக்கு அனுமதி இல்லை. திருக்கடையூரை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, விவிஐபி, விஐபி-களுக்கு மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதால், பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அடையாள அட்டை வைத்திருந்த செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு, அடாவடியாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பணக்காரர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து நடந்த திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேக விழா உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.