திருச்சிராப்பள்ளி, அக்.6 - திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த குமுளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி லால்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கல்லூரியில் பிற மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வரு கின்றனர். இந்நிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குடிநீர் வராத நிலையில், அதை சரி செய்யாமல் கல்லூரி நிர்வாகம் சுற்ற றிக்கை விடுகிறது. கழிவறை வசதி யின்றி மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். கல்லூரி வந்து செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் மாணவர்கள் நெடுந் தூரம் நடந்து வரவேண்டி உள்ளது. மேலும், ஆசிரியர் பற்றாக்குறை, மாண வர்களின் வாழ்க்கையை கேள்விக் குறி யாக்கி உள்ளது. இதனை கண்டித்தும் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி யும், இந்திய மாணவர் சங்க திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் வெள்ளி யன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் தமிழரசன் தலைமை வகித் தார். மாநில துணைச் செயலாளர் ஜி.கே. மோகன், மாநிலக் குழு உறுப்பினர் சூரியா மற்றும் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பின்னர் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கல்லூரி முதல்வர், மாணவ சங்க பிரதி நிதிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர். அதில், ‘அடிப்படை வசதி களை செய்து தர உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாக’ தாசில்தார் உறுதி யளித்தார். இதையடுத்து மாணவர் சங்கத் தினர் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.