திருவையாறு, ஏப்.28-
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மனக்காரம்பை தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார் (49). கேபிள் டிவி ஆபரேட்டர். இவருடைய மனைவி உதயா (37). திருவையாறு அருகே திருப்பழ னம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பாலகுமார் வேலை விஷயமாக வியாழக்கிழமை வெளியூர் சென்று விட்டார். உதயா பள்ளிக்கு சென்று விட்டார். பள்ளி முடிந்த வீடு திரும்பிய உதயா வீட்டில் பின் புறக்கதவு திறக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் பாலகுமார் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த 15 பவுன் நகை, 70 ஆயிரம் ரொக்கப் பணம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயி ருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதேபோல், திருச்சிற்றம்பலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழ கத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஜயகுமார் (62), தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் தேதி உறவினர் வீட்டு விசேசத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோ வில் இருந்த ரூ.2.40 லட்சம் மதிப்பிலான நகை, ரொக்கப் பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், காவல் துறையி னர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.