districts

img

பெரம்பலூர் அருகே தனியார் தொழிற்சாலை கழிவுகளால் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் ஜன 11.                                        பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி சாலை அருகே உள்ள கல்லுமலை பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பெரம்பலூர்; ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  அம்மனுவில், தங்கள்  பகுதியில் பிசிவி பிளாண்ட் தார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. உடல் அரிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.  தொழிற்சாலையும் விதிமுறையை கடைப்பிடிக்க வில்லை. அங்கு இயங்கி வரும் ஒரு அங்கன் வாடிமையமும் இழுத்து மூடிவிடும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதி மக்களுக்கு மருத்துவ ரீதியாக உதவிகள் செய்ய வேண்டும், அப்பகுதியில் இருக்கும் ஏரியில் எம்சாண்ட் கழிவுகள் எந்தளவிற்கு கலந்து பாதிப்புகள் உள்ளது என்பதை ஆய்வு செய்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதோடு பிசிவி பிளாண்ட தொழிற்சாலை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பம் உள்ளது அதனை மாற்றித்தர நடவடிக்கை வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனு அளிக்க வந்த போது ஆட்சியர் இல்லாததால் துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.   ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எம்.சக்திவேல், மாவட்ட தலைவர் எஸ்.கே.சரவணன், பொருளாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.