மயிலாடுதுறை, அக்.1 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எருக்கூர் ஊராட்சியில் உள்ள குடிமனை இல்லாத பட்டியல் வகுப்பு மக்களுக்கு குடி மனை வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத் துறையால் கையகப்படுத்தப்பட்ட இடத்தை உரிய பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக் கிழமை சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் துவங்கியது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். அமைப்பின் மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சிஐ டியு மாவட்ட செயலாளர் மாரியப்பன், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன், சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் உரையாற்றி னர். இரவிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில், வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், கோரிக்கை களை 30 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததை யடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.