districts

img

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு

நத்தம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேச்சு நத்தம், பிப்.9- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேருந்து நிலைய  ரவுண்டானா முன்பு மேற்கு மாவட்ட திமுக சார்பாக ஒன் றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். வேட சந்தூர் எம்.எல்.ஏ காந்தி ராஜன், நத்தம் தொகுதி முன்  னாள் எம்எல்ஏ ஆண்டிஅம்ப லம், மாவட்ட பொருளாளர்  விஜயன், ஒன்றியச் செயலா ளர்கள் ரத்தினக்குமார், பழ னிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் முன் னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார்.  இந்த கூட்டத்தில் அமைச்  சர் சக்கரபாணி பேசுகை யில், தமிழகத்தில் நூறு நாள் வேலை தொழிலாளர் களுக்கு முறையாக சம்ப ளம் வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. தமிழ கத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு கூட உரிய நிதி யை வழங்கவில்லை. இப்படி  தொடர்ந்து தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்து கொண்டே வருகிறது. வரு கின்ற காலங்களில் நத்தம்  பகுதியில் அரசு கலைக் கல்  லூரி கொண்டு வரப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜா மணி, மாநில பொதுக்குழு  உறுப்பினர் முத்துகுமார் சாமி, சாணார்பட்டி ஒன்றியச்  செயலாளர்கள் தர்மராஜன், மோகன் உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர்.