திருச்சிராப்பள்ளி, நவ.23- வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய் வூதியம். அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வுகால பணப்பயன்களை வழங்க வேண் டும். 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர் களுக்கு பழைய பென்rன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் வியாழனன்று திருச்சியில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக திருச்சி மண் டல தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி மண்டல தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன், ஓய்வு பெற்ற நல அமைப்பு மாநில துணைத்தலை வர் சண்முகம், திருச்சி மண்டல தலைவர் சேகர் ஆகியோர் விளக்கிப் பேசினர். 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
அரசு போக்குவரத்துக் கழகங்களை படிப்படியாக தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட்டு பொதுமக்கள் சேவை யில் லாப நோக்கம் இன்றி செயல்படும் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்து, 15 ஆவது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே துவங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி அரசு போக்கு வரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்கள் தொழிலா ளர்கள் சார்பில் கும்பகோணம் தலைமையக அரசு போக்குவரத்து கழகம் முன்பு தொடர் முழக்கபோராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி ஐடியு கும்பகோணம் கோட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார் சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் சி ஜெயபால், நாகை மண்டல தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ் ராஜேந்தி ரன், ஐஎன்டியுசி வைத்தியநாதன், எம்எல்எப் பாலு, ஏஐடியுசி மதிவாணன் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச்சங்க பொறுப்பாளர்கள் ராம மூர்த்தி, பாஸ்கர், ஞானசேகர் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வு பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.