வேதாரண்யம், ஜன.30- நாகப்பட்டினம் மாவட்டம் அகஸ்தியன் பள்ளியிலிருந்து - திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை அமைக்கும் பணி யானது 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செண்பகராயநல்லூர் ஊராட்சியில் உள்ள இருப்பு பாதையில், பாதாள இருப்பு பாதை அமைத்து தரக் கோரியும், சப்வே இல்லாததால் அப்பாதையை பயன்படுத்தி வரும் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்ல வழியின்றியும், இறந்தவர்கள் சடலங்கள் கூட கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு தலைமை யில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.