அருமனை, அக். 2- கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மலையோர கிராம மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். குற்றியாறு தரைப்பாலம் மூழ்கியதால் மலையோர கிரா மங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மழை லேசாக ஓய்ந்ததால் நீர் வரத்து சிறித ளவு குறைந்துள்ளது. இதனால் மக்கள் தரைப்பாலம் வழியாக ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நடந்து சென்றனர். இது ஆபத்தான பயணமாகும். மலையி லிருந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் துயரத்தை சந்திக்க நேரும். உடனடியாக ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கை யாகும்.