விருதுநகர், ஆக.6-
விருதுநகரில் தொடர்ந்து ஒரு வார காலமாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சாலை கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
விருதுநகரில் சனிக்கிழமையன்று அதிகபட்ச வெப்ப நிலை 102.2 டிகிரி பாரன் `ஹீட் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது.
கடந்த ஒரு வார காலமாக விருதுநகர் மாவட்டத்தில் வெயிலின் உக்கிரம் மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், விருதுநகரில் அதிகபட்ச வெப்ப நிலை 39 டிகிரி செல்சியஸ் என பதி வாகியுள்ளது. அதாவது 102.2 டிகிரி பாரன் `ஹீட் வெப்பம் பதிவானது.
அதிக வெப்பத்துடன் காற்றும் சேர்ந்து அடித்து வருவதால் பெரும் அனல் காற்று வீசத் தொடங்கியது. இதன் காரணமாக, பிர தானச் சாலைகளில் வாகன ஓட்டிகள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொது மக்கள் தங்களது வீடுகளுக்குள் ளேயே முடங்கிக் கிடந்தனர். அக்னி நட்சத் திர நாட்களில் ஏற்படும் வெயிலின் தாக் கத்தை விட கூடுதலாக வெப்பம் இருப்ப தாக பொது மக்கள் தெரிவித்தனர்.