திருச்சிராப்பள்ளி, ஜூன் 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபி ஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திய நாதனிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப் பதாவது: திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஏற்கனவே கே.சாத்தனூர் பேரூராட்சியாக இருந்த போது படுகைக்கு மேற்கே, பஞ்சப்பூருக்கு கிழக்குப்புறம், கோரையாறு மேல்புறத்தில் அமைந்துள்ள மயானம் 216, 238 சர்வே எண்ணில் பரம்பரையாக இடுகாடு, சுடு காட்டை இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். தற்போது மேற்கண்ட இடத்தில் மாநக ராட்சி சார்பில் மின் மயானம் அமைக்க பணி கள் நடைபெற்று வருகின்றன. மின் மயானம் அமைக்கப்படும் பட்சத்தில், எங்கள் ஊருக் குள்ளேயே தான் சடலங்கள் எடுத்துச் செல்லப் படும். மேலும் எங்களுக்கு உரிய சுடுகாடும் பறிபோகும் என கருதுகிறோம். எனவே மின் மயானம் அமைக்கும் பணியினை கைவிட்டு, எங்கள் ஊர் மக்களுக்கான மயானத்திற்கு அடிப்படை வசதிகள், தகன மேடை, தகர கொட்டகை அமைத்து தர வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பிலும் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். மனுவை மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதனிடம் கொடுத்த போது, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, கிளை செயலாளர் கல்யாணி, மோகன், சுரேஷ், அரசாயி, முனியம்மாள், அஞ்சலை, முருகன், பானுப்பிரியா, சௌமியா ஆகி யோர் உடனிருந்தனர்.