மன்னார்குடி, டிச.14 - கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தபால் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளது. கமலேஷ் சந்திரா கமிஷன் பரிந்துரை களை மோடி அரசு அமல்படுத்திட வேண்டும். எட்டு மணி நேர வேலை ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழி யர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் டிச.12 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நாடு தழுவிய போராட்டத்தின் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டத்தில் பணிபுரியும் 250 அஞ்சலக ஊழியர்களும் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகர, கிராம தலைமை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்கள் உள்பட அனைத்து அஞ்சல் துறை அலுவலகங்களிலும் தபால் விநியோ கப் பணிகள் முடங்கியுள்ளன. மன்னார்குடி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். அரியலூர் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் அரியலூரில் மாவட்டத்தில் 166 அஞ்சல் நிலை யங்களில் சேவை பாதிக்கப்பட்டது.