districts

img

நீட் தேர்வில் குளறுபடி ஒன்றிய அமைச்சர் பதவி விலக கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 24 - நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  பதவி விலக வலியுறுத்தியும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் திரு.வி.க அரசு கலை கல்லூரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாண வர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வி. சந்தோஷ் தலைமையில் 500-க்கும் மேற் பட்டோர் கல்லூரியிலிருந்து பேரணியாக சென்று கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் அர விந்த்சாமி மற்றும் திருவாரூர் மாவட்டச் செய லாளர் பா.ஆனந்த் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினார்.