districts

வழக்கறிஞரை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

மயிலாடுதுறை, செப்.12 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை தாக்கிய காவல்  ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம்  அபராதம் விதித்தும், துறை ரீதியாக நடவ டிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல்.திருமாவள வனை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்ட தால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது, விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மண்டல செயலாளராக பொறுப்பு வகித்த வழக்கறிஞர் வேலு குபேந் திரனை, அப்போதைய சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு துரத்தி சென்று தாக்கி கைது செய்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சென்னை மனித உரிமை ஆணையத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த நிலம், நீர்  பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் விஷ்ணு  என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலை யில் இந்த வழக்கில் வழக்கறிஞர் கென்னடி  ஆஜரானார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “பொது வெளியில் வழக்கறிஞர் வேலுகுபேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மனித உரி மைக்கு எதிரானது. அவர் மீது தாக்குதல்  நடத்திய காவல் ஆய்வாளர் சிங்காரவேலு வுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தர விட்டார். மேலும், அந்த தொகையினை தமிழக அரசு, வழக்கறிஞர் வேலு குபேந்தி ரனுக்கு கொடுத்துவிட்டு, காவல் ஆய்வாளர்  சிங்காரவேலுவின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும்,  அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார். சிங்காரவேலு தற்போது பொறையார் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

;