districts

img

சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சி ஜெர்மன் தூதர் திறந்து வைத்தார்

தரங்கம்பாடி, பிப்.9 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடியில் உள்ள  சீகன்பால்கு அருங்காட்சிய கத்தில்    “தரங்கம்பாடியில் சீகன்பால்கு பணியின் தட யங்கள் தேடல்” தலைப் பிலான ஓவியக் கண்காட் சியை ஜெர்மன் நாட்டு தூதர் திறந்து வைத்து பார்வையிட்டார். சீகன்பால்கு முதன் முதலாக தமிழை அச்சேற்றியதன் காரணமாக இந்தியாவின் அச்சகத் தந்தை என்று இவர் போற்றப்படுகிறார். அவர் வாழ்ந்த இல்லம் கடந்த 2017 ஜூலை  15 அன்று ஜெர்மனி அரசு நிதியுதவியுடன் அருங் காட்சியகமாக மாற்றப்பட்டது. அந்த அருங்காட் சியகத்தில் ‘சீகன்பால்கு செய்த பணியின் தட யங்கள் தேடல்’ என்ற தலைப்பில் 300 ஆண்டு களுக்கு முன்பு, தரங்கம்பாடியில் வாழ்ந்த மக்க ளின் கலாச்சாரமும், தற்போதைய கலாச்சாரத் தையும் வெளிப்படுத்தும் ஓவியங்கள் என ஜெர்மன் நாட்டு ஓவியர்களான மேனன் பர்சி யன், கிறிஸ்டியன் பெர்க்மென், ஸ்டெஃபான் ஸ்வார்செர் ஆகியோரால்  வரையப்பட்ட பல்வேறு ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.  இந்த ஓவிய கண்காட்சியின் திறப்பு விழா நிகழ்ச்சி புதனன்று மாலை நடைபெற்றது. விழா விற்கு டிஇஎல்சி பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை வகித்தார். தரங்கம்பாடி புதிய எருச லேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ் வர வேற்று பேசினார். ஜெர்மன் நாட்டு தூதர் மிஹே லாகியுஹிலா கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.  ஜெர்மன் நாட்டில் உள்ள ஹோல்ஹார்ட் பவுண்டேசனை சேர்ந்த ஓவியர் டாக்டர் மேனன் பஸ்சியன், ஹல்லே பிராங்கோ பவுண்டேசன் இயக்குநர் டாக்டர் முல்லர் பால்கே, டிஇஎல்சி  செயலர் தங்கபழம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  விழாவில் தரங்கம்பாடி பங்கு தந்தை அரு ளானந்தம், பொறையார் கல்லூரி முதல்வர் ஜான் சன்ஜெயக்குமார், டென்மார்க்கை சேர்ந்த பவுல் பீட்டர்சன். தரங்கம்பாடி பேரூராட்சி துணைத்  தலைவர் பொன்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சீகன்பால்கு அருங்காட்சி யக இயக்குநர் சாமுவேல்மனுவேல் நன்றி கூறி னார்.