நீடாமங்கலம், ஜன.8- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், வட தமி ழகத்தின் உள்மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் ஏழு நாட் களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை காலை எட்டு மணியோடு முடிவ டைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை நிலவரம்- செ.மீட்ட ரில் (மாவட்டம் வாரியாக) மயிலாடு துறை மாவட்டம்-13.18, நாகப்பட்டி னம்-11.92, அரியலூர்-5.04, தஞ்சா வூர்-4.17, பெரம்பலூர்-1.21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் நீடாமங்கலம் ஒன்றியம். அதங்குடி கிராமத்தில். இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் 50 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விளை நிலைங்களையும், விவ சாயிகளையும் மார்க்சிஸ்ட் கட்சி யின். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி, ஒன்றியச் செய லாளர் டி.ஜான் கென்னடி விவ சாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.காளியப் பன் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய அவர்கள், “வேளாண் துறையும் பாதிக்கப் பட்ட நிலங்களை கணக்கீடு செய்து விவசாயி களுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும்” என அரசைக் கேட்டுக் கொண்டனர் திருவாரூர் திருவாரூர் மாவட்டம் வலங் கைமான் ஒன்றியம்,சாரநத்தம் ஊராட்சி கொக்கலாடி, வேடம்பூர் பகுதியில் உள்ள புலவனாற்றுப் பாலம் கட்டப்படாமல் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்திற்குப் பிறகு தற்காலிக தரைப்பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்த நிலையில். நிரந்தரப் பாலம் கட்டும் பணி தொடங்கவில்லை. தற்போது பெய்த கடும் மழை யில் தரைப் பாதை சீர் குலைந்து மக்கள் செல்ல முடியாத நிலை யில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாதையை உடனடியாகச் சரி செய்ய வேண் டும், புதிய பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை அரசு எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இராதா வலியுறுத்தியுள்ளார்.