districts

செவிலியர் வருவதில்லை மருத்துவர் வாரம் ஒருமுறையாவது வருவாரா

பாபநாசம், ஆக.10-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றி யக்குழுக் கூட்டம் தலைவர் சுமதி தலைமையில் நடை பெற்றது. ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பழனிசாமி  முன்னிலை வகித்தார்.  

    திமுக உறுப்பினர் ஹாஜா மைதீன்: பேசும்போது, திரு மண்டங்குடி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்  டும். துணை சுகாதார நிலையம் கட்டித் தர வேண்டும்.

   திமுக உறுப்பினர் விஜயன்: திருவைக்காவூர் களத்து  மேட்டுத் தெருவிற்கு சாலை அமைக்க வேண்டும். திரு வைக்காவூரிலுள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற  வேண்டும். தேவனோடையில் இடுகாடு கொட்டகையை புதிதாக அமைக்க வேண்டும். தேவனோடை, திருவைக்கா வூர்குளத்திற்கு சுற்றுச் சுவர் கட்டித் தர வேண்டும். எடக்குடி  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சற்றுச் சுவர் கட்டித் தர வேண்டும்.  

    திமுக உறுப்பினர் சுரேஷ்: கபிஸ்தலம் பின்னமரம் அங்கன்வாடி பழுது பார்ப்பு பணியை விரைவாக முடிக்க  வேண்டும். முதலியார் தெருவில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும்.  

    திமுக உறுப்பினர் ஆனந்த்: உமையாள்புரம் துணைச்  சுகாதார நிலையத்திற்கு செவிலியர் வருவதில்லை. வாரம்  ஒரு முறையாவது மருத்துவர் வர வேண்டும் என்றார்