அரியலூர்/புதுக்கோட்டை, அக்.7- அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் 17 முதல் 25 வயதுக் குட்பட்டவர்களுக்கான நெடுந்தொ லைவு ஓட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. அரியலூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடி யசைத்து ஓட்டத்தை தொடக்கி வைத் தார். ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தனித்தனியே நடைபெற்ற ஓட்டத்தில், ஆண்களுக்கு 8. கி.மீ தூர மும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற இரு பிரிவி னருக்கும் முதல் பரிசு ரூ.5,000, 2 ஆம் பரிசு ரூ.3,000, 3 ஆம் பரிசு ரூ.2,000, 4 முதல் 10 வரை வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர் களுக்கு சிறுவளூர் அரசுப் பள்ளி சார்பில், மாணவ, மாணவிகள் துணிப் பைகளை வழங்கினர். புதுக்கோட்டை மாரத்தான் போட்டிக்கு இணை யான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட் டையில் சனிக்கிழமை கொடிய சைத்து துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முரு கேசன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.