மயிலாடுதுறை, பிப்.6 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் 1671 இல் கட்டப்பட்ட டென் மார்க் நாட்டின் ராணுவ படைத்தள பதிகள் வசித்த இல்லம் புனரமைக்கப் பட்டு திங்களன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 30 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். தரங்கம்பாடியை ஆட்சி செய்த டென்மார்க் நாட்டினர் 1620 இல் தரங்கம் பாடியையும் அதன் சுற்றுப்புறத்தையும் தஞ்சை மன்னரிடம் விலைக்கு வாங்கி வாணிப தளம் அமைத்ததோடு ஆட்சி யையும் நடத்தி வந்தனர். 1845 வரை 225 ஆண்டுகள் தரங்கம்பாடியை ஆட்சி செய்த காலத்தில், படை தளபதிகள் தங்குவதற்காக 1671 இல் கமாண் டர்கள் இல்லத்தை கட்டி அந்த இல்லத் தில் படை தளபதிகள் வசித்து வந்தனர். 1845 இல் தரங்கம்பாடியை ஆங்கி லேயரிடம் விற்ற பிறகு, கமாண்டர்கள் இல்லமும் ஆங்கிலேயர் வசம் சென் றது. அதன்பின் 1945 இல் இந்த கமாண்டர் இல்லம் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் (டிஇஎல்சி) கட்டுப்பாட்டிற்கு வந்தது. டிஇஎல்சி நிர்வாகத்தினர் இங்கு ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவி செயல்படுத்தி வந்த னர். ஆசிரியர் பயிற்சி பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட பின், எந்த பயன்பாடும் இல்லாமல் இருந்த டென் மார்க் கமாண்டர் இல்லம் சிதிலம டைந்து கிடந்தது. அதன்பின் டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச் சங்கத்தினர், டென்மார்க் நாட்டினர் கட்டிய கட்டி டம் என்பதால் அதை பராமரித்து நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த இடத்தை டிஇஎல்சி நிர்வாகத்திடமிருந்து 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கி, இடிந்து கிடந்த கமாண்டோ இல்லத்தை சீரமைத்தனர். சீரமைப்பு பணிகள் முடிந்த நிலை யில், அதன் திறப்பு விழா திங்களன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச் சங்கத்தின் தலைவர் பவுல் பீட்டர் சன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நூடுஹல்ஸ் வரவேற்றார். டிஇஎல்சி பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் இல்லத்தை திறந்து வைத்தார். டென்மார்க் நாட்டிலிருந்து ஆசி ரியை மேரிகிலிட் தலைமையில் வந்தி ருந்த 30 மாணவ, மாணவிகள், தரங்கம் பாடி பேரூராட்சி துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், டிஇஎல்சி நிர்வா கத்தினர், ஆயர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.