திருச்சிராப்பள்ளி, நவ.1- திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிப்பவர் கூலித் தொழிலாளி சங்கர். இவரது மகன் சிவா குண்டூர் அருகே உள்ள தனியார் (எம்ஐஇடி) கல்லூரியில் படித்து வந்தார். மகனின் வற்புறுத்தல் காரணமாக, கூலி வேலை செய்யும் பெற்றோர் மக னுக்கு புதிதாக கேடிஎம் பைக் வாங்கி கொடுத்துள்ளனர். இந்த வகை பைக்கு கள் அதிவேகத்தில் செல்லக்கூடியவை. இந்நிலையில், சிவா புதனன்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு பைக்கில் கிளம்பினார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சாலை யில் சிவா சென்றபோது, முதியவர் ஒருவர் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க, தனது பைக்கை அம்பேத்கர் நகர் வளைவு சாலையில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதியுள்ளார். அதிவேகமாக வந்து மோதியதால் தூக்கி வீசப்பட்ட சிவா, சாலையின் மறு பக்கம் காய்கறி ஏற்றி வந்த மினி லோடு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்துள்ளார். சிவா விழுந்த வேகத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி தூரம் இழுத்துச் சென்று, ஒரு மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் மினி லோடு ஆட்டோவில் சிக்கிய நிலையில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மணிகண்டம் போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன் மினி சரக்கு லாரியில் சிக்கி இருந்த சிவாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.