districts

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது

மயிலாடுதுறை, ஆக.9-

      மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே யுள்ள டி.மணல்மேடு கிராமத்தில் தரங்கம்பாடி, செம்ப னார்கோவில் ஒன்றியங்களுக்கான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட  செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உரை யாற்றினர். கட்சி உறுப்பினர்களுக்கான ரசீதுகளை வழங்கி மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் சிறப்புரை யாற்றினார். இதில் இரு ஒன்றியங்களின் உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.