ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 809 மாணவ, மாணவிகளுக்கு அரசு பள்ளி கல்வித்துறை , அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 2022- 2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா, ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் இலவச மிதிவண்டிகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் தவிக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயா உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.