தஞ்சாவூர், டிச.10- ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் ரூ.5 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரணம் கோரியிருந்த நிலையில் ரூபாய் ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி யில் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுவதாக அறி விக்கப்பட்டிருந்த ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு, புயல், மழை காரணமாக டிசம்பர் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்று கின்றனர். மக்களவையில் ஒன்றிய அரசை அதானி சர்க்கார் என்றும், மோடிக்கும், அதானிக்கும் இடையேயான அரசியல் மற்றும் வர்த்தக உறவை அவ்வப்போது அம்பலப்படுத்தி, மக்களவை யில் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தும் வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹூவா மொய்த்ராவை விசாரணை என்ற பெயரில் பதவி நீக்கம் செய்து பழிவாங்கியிருக் கும் போக்கு கண்டிக்கத்தக்கது. அண்மையில் ஏற்பட்ட மழை, புயல் பேரிட ரால் 10 மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித் துள்ளன. மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அல்லல்படுகின்றனர்.
அமைச் சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மழை தொ டங்கிய நாளிலிருந்து மக்களுக்காக களத்தில் நின்று உதவி செய்கின்றனர். இந்த வெள்ள நிவாரணத்துக்கு, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் மீட்புப் பணிகள் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளன. தங்களால் இயன்ற அளவு மக்களுக்குரிய நிவா ரணங்களை அரசு செய்து வருகிறது. அரசு செய்து வரும் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பி னரும் ஒத்துழைப்பு தருவதுதான் இயல்பு நிலை திரும்புவதற்கு ஏதுவாக இருக்கும். தமிழக முதல்வர் ரூ.5 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரணம் கோரியிருந்த நிலையில், ஒன்றிய அரசு ரூபாய் ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியுள்ளது. ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது ஏமாற்ற மளிக்கிறது. ஒன்றிய அரசுடன் அதிமுகவினர் நட்புறவில் இருப்பதால், அவர்கள் பிரதமரை வலியுறுத்தி ரூ.5 ஆயிரம் கோடி வழங்குவதற்கு ஆதரவு பெற முன்வர வேண்டும். அவ்வாறு வந்தால் இன்னும் நிவாரணம் வழங்க உதவி யாக இருக்கும். மழை நீர் வடிகால் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பணிகளை முடித்திருப்பதாகத் தெரிய வருகிறது. எஞ்சிய பணிகள் விரை வில் முடிக்கப்படும். இது தொடர்பாக அவசியம் என்றால் வெள்ளை அறிக்கை வெளியிடலாம். இத்திட்டத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது, எவ்வளவு நிதி செலவு செய்யப் பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது அவசியமானதுதான். இவ்வாறு அவர் கூறினார்.