காலையில் கதிரவன் புலரும் முன் உன் கையில் தீக்கதிர் தவழுது படிக்கணும் என தோணுது.
தலையங்கம், கட்டுரை நாட்டின் கருத்து முதல்வாதி களின்நிலையை தோலுரித்துகாட்டும் வரிகளை படிக்க வைக்கத் தூண்டுது.
பாரினில் பவனி வரும் கார்ப்பரேட்டுகளின் கனவை பாட்டாளி மக்களிடத்தில் பட்டவர்த்தனமாக படம்பிடித்து காட்டும் தீப்பொறியாய் தீக்கதிர் நாளேடு!
ஒவ்வொரு கட்சிக்கும் உதயமாகுது வார இதழ், நாளிதழ், மாத இதழ்.
ஆளும் கட்சிகளை துதி பாடும் நாளேடு வேறு.
தினம் தினம் பாட்டாளி பாமரனின் வாழ்வா தாரத்தின் அவலத்தை எட்டு திக்கும் கொண்டு செல்லும் தீப்பொறியாய் தீக்கதிர் நாளேடு!
படித்தவன், பட்டம் பெற்றவன் வாழ்விழந்து கண்பூத்து கவலையோடு காத்திருப்பவருக்கு வெள்ளி மலை வெளிச்சமாய் வழிகாட்ட வகை வகையான வழி முறைகளை எடுத்து வைக்கும் தீப்பொறியாய் தீக்கதிர் நாளேடு!
சிறுபான்மை மக்களின் சித்திரவதையை ‘பசு கூட்டம்’ படுத்தி வைக்கும் கொடுமைக்கு எதிராக கோபத்தை கிளறி விடும் கருத்தை, பாரினில் பட்டித் தொட்டி எல்லாம் மக்கள் பார்க்கும் கண்ணாடியாய் படம் பிடித்து காட்டும் தீப்பொறியாய் தீக்கதிர் நாளேடு!
அறிவியலை அள்ளி அணைத்து ஆகம வர்ணத்தின் வன்மத்தை வரலாறு ரீதியாக விமர்சனம் செய்து மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீப்பொறியாய் தீக்கதிர் நாளேடு!
அமேசான் காட்டுத் தீயால் வனவிலங்குகள் சிக்குண்டு திக்கு திசை மாறி பிழைத்தால் போதும் என ஓடும் கூட்டமாய் தினம் தினம் காஷ்மீர், மணிப்பூர் பற்றி எரியும் இன மோதல் கொடுமைகளை, காட்சியாக்கும் நாளேடு.
திரௌபதியின் துகில் உரித்த துரியோதனன் கதாபாத்திரத்தின் இரண்டாம் பதிப்பாய் மணிப்பூரில் பல திரௌபதிகளின் துகில் உரிந்த அவலத்தை எடுத்து ரைக்கும் நாளேடு. காடு மேடு கழனியெல்லாம் உழைப்ப வர்களின் கண்ணெதிரே காண்பது போன்ற காட்சியை எழுத்து வரிகளை படிக்க இதயம் கலங்வைக்கும் நாளேடு.
உறங்கும் மனிதனை உசுப்பி நாளை கோபக் கனலாய் கொதித்து எழுந்து எளிய நடையில் எல்லோ ரும் வாசிக்கும் ஏடாய், நாளை எல்லோரின் கையிலும் புரள, தீமைகளை கருத்தால் ஒழித்திட தீக்கதிர் எண்ணிக்கையை உயர்த்திடுவோம்!
கே.அபிமன்னன்,
சிபிஎம் தஞ்சை ஒன்றிய செயலாளர்