districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி செம்மங்குடியில் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது

கும்பகோணம், மார்ச் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  போராட்டத்தை தொடர்ந்து, செம்மங்குடி யில் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் செம்மங்குடி, பெரப்படி, கூகூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான நிலங்க ளுக்கு பாசன வாய்க்காலாக முடிகொண் டான் ஆறு இருக்கிறது. இதிலிருந்து பெரப்படி  வாய்க்கால், ஆரியச்சேரி வாய்க்கால், பொட்ட வாய்க்கால் என கிளை வாய்க்கால் கள் மூலம் பாசன வசதி பெற்று விவசாயி கள் பயனடைந்து வந்தனர்.  ஆனால் மேற்கண்ட வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல், செடி, கொடிகளுடன் புதர்  மண்டி கிடந்தது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் செம்மங்குடியில் போராட் டம் நடத்தப்பட்டது. மேலும்,  சம்பந்தப்பட்ட கும்பகோ ணம் வட்டாட்சியர், திருவிடை மருதூர் வட்டார வளர்ச்சி அலு வலர், பாசன வாய்க்கால் அதி காரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத் தின் கோரிக்கைகளை ஏற்று, மேற்கண்ட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று  வருகிறது.  இப்பணிகளை, திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி வேல், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் முருகன், அருள்தாஸ் ஆகியோர் நேரில்  பார்வையிட்டனர். சிபிஎம், விவசாயிகள் சங்கப் போராட்டத் தால், தூர்வாரப்பட்ட வாய்க்காலின் மூலம்  பாசன வசதி பெறும் விவசாயிகள் மார்க்சிஸ்ட்  கட்சிக்கும், விவசாயிகள் சங்கத்திற்கும் நன்றி  தெரிவித்தனர்.