பூவார், செப்.18- ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றுள் ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஈ.பி.ஜெயராஜன் கூறினார். பொருளாதாரத்தில் நசுக்கி கேரளத்தை அழிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட் டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவளம் தொகுதிக் குழு சார்பில் நடைபெற்ற தர்ணாவை ஞாயிறன்று (செப்.17) அவர் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் மேலும் கூறிய தாவது: ஒன்றிய மோடி அரசின் நோக்கம் வகுப்புவாதத்தை வளர்ப்பது மட்டுமே. நாட்டில் அனை த்து துறைகளிலும் மக்களின் வாழ்க்கை கடினமாகிவிட்டது. விவ சாயத் துறை அழிந்தது. 12.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன்கள் தள்ளு படி செய்யப்பட்டாலும், விவசாயி களின் கடன்கள் ஒரு ரூபாய் கூட குறைக்கப்படவில்லை. மீண்டும், கார்ப்பரேட்டுகளின் ரூ.2.25 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்ய முயற் சிக்கின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியம் நீக்கப்பட்டது. வேலை உறுதி சட்ட வாய்ப்புகள் கூட வெட்டப் பட்டுள்ளன. நாடு மோதல்களின் களமாக மாறியுள்ளது. பாஜக ஆளும் அனை த்து மாநிலங்களிலும் அமைதி சீர்குலைந்துள்ளது. கேரளாவில் இடதுசாரி மனப்பான்மை உள்ள தால் மக்கள் சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். அதை உடைக்க எந்த வகுப்புவாதியும் அனுமதிக்க மாட்டார். கேரளாவில் உள்ள மக்கள் அரசை அழிப்பதே மத்திய ஆட்சியா ளர்களின் நோக்கம். அரசுக்கு செலுத்த வேண்டிய நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தி வைப்பது டன், கடன் வாங்க அனுமதியும் மறுக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டிய யுடிஎப் மௌனம் காத்து பாஜகவுடன் உள்ளது. ஓணம் பண்டிகைக்கு கேரள மக்கள் வறுமையில் வாடுவார்கள் என்று யுடிஎஃப் பிரச்சாரம் செய்தது. கேரளா பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படும் போதும், மக்கள் நலனில் இருந்து மாநில அரசு பின்வாங்கவில்லை. கேரளா வை அழிக்கும் பாஜக மற்றும் காங்கிரஸின் முயற்சிகளை மக்கள் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று இ.பி.ஜெய ராஜன் கூறினார். சிபிஐ எம்.கோவளம் தொகுதி செயலாளர் பி.எஸ்.ஹரிகுமார் தலைமை வகித்தார்.