districts

img

நுகர்பொருள் வாணிபக் கழக சங்கத்தினர் வாயிற்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.14- பிப்.16 அகில இந்திய வேலைநிறுத்தத்தை விளக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் வாயிற்கூட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்துகள், இயந்திரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்.  கொள்முதல் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கழக ரேசன் கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இண்டேன் எரிவாயு சுமைப்பணி ஊழியர்களுக்கு ஐஓசி வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 16 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்பு வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மண்டலத் தலைவர் வேலு தலைமை வகித்தார். வேலை நிறுத்தத்தை விளக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநிலச் செயலாளர் ராசப்பன், மண்டல செயலாளர் தீனதயாளன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர்.  மண்டல பொருளாளர் சின்னையா நன்றி கூறினார்.