தஞ்சாவூர், ஜூலை 29 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஐசக் நியூட்டன் (67). இவர் சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் நெல்லையடிக்காடு கிராமத்தில், விவசாயம் செய்து வருகிறார். நெல்லையடிக்காடு வருவாய் கிரா மத்தில் சர்வே எண்:124, 125/1 என்ற புல எண்ணில், 7 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தார். இந்நிலை யில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை யால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேளாண்மைத் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி, 3.055 ஹெக்டேர் பாதிக்கப்பட்டதாக அரசுக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில், ஐசக் நியூட்டனுக்கு பருவமழை பாதிப்பு இழப்பீடு பெற உரிய ஆவணங்கள் பெற்று, வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறையினர் பதிவு செய்தனர். இத னால், ஐசக் நியூட்டனுக்கு ரூ.61 ஆயி ரம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இதற் காக, சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் துறைக்கு, விவசாயி ஐசக் நியூட்டன் லெட்சுமி விலாஸ் வங்கிக் கணக்கு புத்தக நகலை அளித்திருந்தார். ஆனால் இந்த கணக்கு எண் தவறா னது, மனைவி மேரி சரோஜாவுடன் இணைக்கப்பட்ட ஜாயிண்ட் அக்கவுண்ட் தந்தது செல்லாது, லெட்சுமி விலாஸ் வங்கி, சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டதால், ஐஎப்எஸ் கோட் மாறிவிட்டது என பலமுறை அலைக் கழித்துள்ளனர். இதில்தான் பிரதமரின் நிதியுதவிப் பணம் வருகிறது என்று சொன்ன போதும் வேளாண் துறை அதிகாரி கள் கண்டு கொள்ளவில்லை. இதை யடுத்து பேராவூரணி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில், ஐசக் நியூட்டன் தனது பெயரில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்கி அதற்கான ஆவணங்களை யும் வேளாண் துறைக்கு கொடுத்துள் ளார். ஆனால் ஓராண்டு கடந்த நிலையி லும், ஐசக் நியூட்டனுக்கு வெள்ளப் பாதிப்பிற்கான பயிர் இழப்பீடு பணம் கிடைக்காமல் உள்ளது.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வேளாண்துறை அலுவலகம், பேரா வூரணி வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விவசா யிகள் குறைதீர் கூட்டம் என பல இடங் களுக்கு அலைந்து மனு அளித்தும், வேளாண் துறை கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மாவட்ட அதிகாரிகள் வரை பல முறை நேரில் சென்று மனு அளித்தும், இதுவரை உரிய தீர்வு கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு, மக்களை தேடி முதல்வர் சிறப்புத் திட்டம் பேராவூரணியில் நடை பெற்ற போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடமும் நேரில் மனு அளித்துள் ளார். ஆனால், விவசாயி ஐசக் நியூட்டன் அளித்த மனு அத்தனையும் காற்றில் பறந்த கதையாகி விட்டது. இதுவரை தனது மனுவுக்கு தீர்வு காணப்படாமல் வேளாண் துறை அலுவலகத்தையும், ஆட்சியர் அலுவலகத்தையும் நோக்கி மனுக்களை அனுப்பியவாறே உள்ளார். மக்களைத் தேடி முதல்வர் திட்டத் தில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி யாக தீர்வு காணப்படுகிறது என்ற முதல மைச்சரின் பேச்சுக்கு மாறாக, அதிகாரி கள் செயல்படுகின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது. எனவே “தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை இதுகுறித்து உரிய ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயி ஐசக் நியூட்டனுக்கு இழப் பீட்டு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது முதிர்ந்த விவ சாயியை அலைக்கழிக்கக் கூடாது” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.