districts

img

திருவாரூர் நவீன நெல் சேமிப்பு நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

திருவாரூர், பிப்.22-  இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருவாரூர் வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் டெல்டா மாவட் டங்களிலான தஞ்சாவூர், திரு வாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் மதுரை, சிவகங்கை, தூத் துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் மொத் தம் 1,42,450 மெ.டன் கொள்ள ளவுடன் அமைக்கப் பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப் புத் தளங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிப்ரவரி 11 அன்று காணொலிக் காட்சி வாயி லாக திறந்து வைத்தார். இந்நிலையில், முதல்வர் இரண்டு நாள் சுற்றுப்பய ணமாக  திருவாரூர் வருகை  தந்தார். அப்போது திருவா ரூர் கிடங்கு வளாகத்தில் ரூ.2.35 கோடி செலவில் 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு சென்று அங்கே திடீர் ஆய்வு மேற் கொண்டார்.  பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம்  கேட்டறிந்து, விரைந்து நடைபெற வேண் டிய பணிகளைச் சுட்டிக் காட்டி, அவற்றை எவ்வித தாமதமுமின்றி துரிதமாக முடித்திட உத்தரவிட்டார். ஆய்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.  இதனை தொடர்ந்து காட்டூரில் திமுக அறக் கட்டளை சார்பில் சுமார் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் கலைஞர் அருங் காட்சியகத்தை பார்வை யிட்டார். மேலும் முதல்வர் பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்து கோ ரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.