districts

img

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்து,உரையாற்றினார்

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 25 வெள்ளியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து,உரையாற்றினார். இந்நிகழ்வில் சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், தாட்கோ தலைவர் உ. மதிவாணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.