districts

img

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு தொடங்கியது

திருவாரூர், செப்.10 - திருவாரூர் மாவட்டம், முத்தமிழறி ஞர் டாக்டர் கலைஞர் விளையாட்டு மைதானத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற் கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப் பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி  வைத்தார். மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் விளை யாட்டுத்துறை அலுவலர்கள் உடனி ருந்தார்.  மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி  மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி அண்ணா விளை யாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பை  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், செவ்வாயன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில்  மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்,  மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், விளையாட்டுத்துறை அலுவ லர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.