மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகர் வஉசி நகர் கிளைச் செயலாளர் ஸ்ரீமதி இல்லத் திருமண நிகழ்வில் மணமக்கள் ஜெ.சாந்தி- கே.சசிகுமார் கட்சியின் மாநிலக்குழு அலுவலகக் கட்டட நிதி ரூ.5 ஆயிரத்தை மாவட்டச்யலாளர் மா.ஜோதிபாவிடம் வழங்கினர். நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி.ஜீவானந்தம், மாநகர் செயலாளர் எம்.தண்டபாணி, எம்.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.