districts

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒரு அறை தரைமட்டமானது

சிவகாசி, டிச.26- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்  பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ஆலை யில் தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே  உள்ளது எம்.மேட்டுப்பட்டி. இங்கு, சுந்தர மூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வரு கிறது. இந்த ஆலையில் திங்களன்று காலை  இரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்  யும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை முற்றிலும் வெடித்துச் சிதறி தரைமட்டமானது.  தொழிலாளர்கள் பணிக்கு வரும் முன்பே இந்த விபத்து ஏற்பட்டதால், பெரும்  சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பிற அறைகளுக்கு தீ  பரவாமல் கட்டுப்படுத்தினர்.  இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த சனிக்கிழ மையன்று பட்டாசு தயாரிப்புப்பணி நடை பெற்றுள்ளது. அப்போது எஞ்சிய இரசா யன மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்  ளனர். அதில் திடீரென ஏற்பட்ட வேதி யியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து  ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.