districts

திருச்சி முக்கிய செய்திகள்

விவசாயி நிலம் ஏலம் விடப்படுவது போராட்ட அறிவிப்பால் தடுக்கப்பட்டது

திருவாரூர், ஜூலை 29 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்குட்பட்ட திருக்கொட்டாரம் கிராமத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர்.  சமீபத்தில் சிறுபுலியூர் கோவில் நிர்வாகம் குத்தகை விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் அதிகளவில் குத்தகை பாக்கி இருப்பது போல் குறிப்பிட்டு, அதனைச் செலுத்த தவறினால் நிலத்தை விட்டு அகற்றப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து விவசாயிகள் நேரில் சென்று விசாரித்த போது, கோவில் நிர்வாகம் முறையான கணக்கு வழக்குகளை பராமரிக்காததும், பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள குத்தகை பாக்கிக்கான தொகையை இன்றைய சந்தை மதிப்பில் கணக்கிட்டிருப்பதும் தெரியவந்தது. எனவே, முறையான கணக்கு வழக்குகள் கொடுத்தால் குத்தகை பாக்கியை செலுத்துவதாக விவசாயிகள் தெரிவித்துவிட்டு திரும்பினர்.  இந்நிலையில், கோவில் நிர்வாகம் அப்பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் நிலத்தை ஏலம் விடுவதாக அறிவிப்பு பலகையை நட்டது. முன்னதாக, ஏல அறிவிப்பு தட்டியை நடுவதற்கு முந்தைய நாளே அதனை தடுத்ததாக பேரளம் காவல்நிலையத்தில் புகாரும் அளித்தது. இதனையடுத்து கோவில் நிர்வாகத்தின் சட்டவிரோதமான ஏல அறிவிப்பை நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெறும் என அறிவித்திருந்தது.  இதற்கிடையே கோவில் நிர்வாக அதிகாரிகள், வட்டாட்சியர் ஆகியோர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசியதில், ஏலத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதி பொதுமக்களும் குத்தகை விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.   

போக்சோ சட்டத்தில் 7 ஆண்டு சிறை

அரியலூர்,  ஜூலை 29 - அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் கண்ணன் (47). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய்  அரியலூர் மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித் தார். அதன் பேரில் விசா ரணை மேற்கொண்ட போலீசார், கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது  செய்தனர். இதுதொடர் பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியா ழனன்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆனந்தன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கண்ணனுக்கு 7  ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

விற்பனையகம் தொடக்கம்

பொன்னமராவதி, ஜூலை 29 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி இயற்கை வேளாண்மை கூட்டுப் பண்ணை உழவர்  உற்பத்தியாளர் நிறுவன உரம், பூச்சி மருந்து மற்றும் விதை விற்பனை நிலைய தொடக்க விழா  ஆலவயலில் நடந்தது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் சந்திரா சக்திவேல், வேளாண்மை அலுவலர் ராதாகிருஷ்ணன், முதன் மைச் செயல் அலுவலர் காளியண்ணன் ஆகி யோர் விற்பனைய கத்தை தொடங்கி வைத்த னர். 

ரத்த தான முகாம்

முசிறி, ஜூலை 29 - திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, முசிறி அறிஞர் அண்ணா  அரசு கலைக் கல்லூரி  இளையோர் செஞ் சிலுவை சங்கம் மற்றும் இன்ஸ்பைர் லயன்ஸ் சங்கம் இணைந்து மாபெ ரும் ரத்த தான முகாம்  நடைபெற்றது. முகாமில்  திருச்சி மகாத்மா காந்தி  அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள் முகாம் நடைபெற உறுதுணையாக செயல் பட்டனர். 93 பேர் ரத்த தானம் செய்தனர்.

மகளிர் விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 29 - ஒன்றிய அரசின் மானி யம் பெறும் பணிபுரியும் மக ளிர் விடுதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தனியார்  பணிபுரியும் மகளிர் விடுதி கள், மதம் சார்ந்த நிறுவ னங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவுச்சட்டத் தின் கீழ் பதிவு செய்து மகளி ருக்கான விடுதி நடத்துப வர்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி (ம) இல்லங்களை நெறிப்படுத்தும் சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப் பட வேண்டும்.  அதன்படி, திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப் படாமல் செயல்படும் பணி புரியும் மகளிர் விடுதியின் நிர்வாகிகள் இணையதளம் வழியாக பதிவு செய்து அக் கருத்துருவினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 17.8.2022-க்குள் ஒப்படைக் குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.  தவறுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு விடுதியினை மூட நட வடிக்கை மேற்கொள்ளப் படும். மேலும் விபரங்க ளுக்கு திருச்சி மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி - 0431-2413796 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

\ஒன்றிய அரசை கண்டித்து இன்று சிஐடியு ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூலை 29 - ஒன்றிய, மாநில தொழிற் சங்க கூட்டமைப்பின் மாவட்டக் குழு ஆலோ சனைக் கூட்டம் கரூர்  சுங்ககேட்டில் நடைபெற் றது. கூட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் பழ. அப்பாசாமி தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலை வர் ஜி.ஜீவானந்தம் கோரிக் கைகளை விளக்கி பேசி னார். மாவட்டச் செயலா ளர் சி.முருகேசன், ஹெச். எம்.எஸ் சங்கம் எஸ்.ஆனந்த்ராஜ், எம்எல்எப் சங்கம் டி.எம்.குணாளன், எல்எல்எப் சங்கம் மா. சுடர்வளவன், எல்பிஎப்  சங்கம் எஸ்.ராஜேஸ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட னர். கடும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, அரசி உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்புகளை எதிர்த்து குரல் எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மோடி அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இதை  கண்டித்து கரூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பின் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு ஜூலை 30 (சனிக் கிழமை) அன்று மாலை 5  மணிக்கு நடத்துவதென  தீர்மானிக்கப்பட்டது.

இலவச பயிற்சி  வகுப்பு துவக்கம் 

திருச்சிராப்பள்ளி, ஜூலை 29 - திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிழ் நெறி வழிகாட்டும் மையத் தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத் தின் மூலம் பல்வேறு ஒன்றிய, மாநில அரசுப் பணி களுக்கான போட்டித் தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  தற்போது ஐபிபிஎஸ் கிளர்க் பதவிக்கான இலவச  பயிற்சி இணைய வழியில் வெள்ளிக்கிழமை முதல் துவங்கப்பட்டுள்ளது.  இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்ப முள்ள திருச்சி மாவட்டத் தைச் சார்ந்த போட்டித் தேர்வு களுக்கு தயாராகும் தேர்வர் கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் 0431-2413510 என்ற  தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

ஆக.15 அம்மாபேட்டை பேருந்து நிலையத்தை  திறக்கும் போராட்டம்: வாலிபர் சங்கம் அறிவிப்பு

தஞ்சாவூர், ஜூலை 29 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் வெ.கார்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலாளர் உ.சரவணன் வேலையறிக்கையை முன்மொழிந்தார். மாவட்டச் செயலாளர் க.அருளரசன் மாநாட்டை வாழ்த்தி பேசினார். நிறைவாக மாநில துணைத் தலைவர் கே.பி.ஜோதிபாசு நிறைவுரையாற்றினார். ஒன்றியப் பொருளாளர் இரா.ராமசந்திரன் நன்றி கூறினார். மாநாட்டில் 15 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக வெ.கார்த்தி, செயலாளராக உ.சரவணன், பொருளாளராக இரா.ராமச்சந்திரன், துணைத் தலைவராக பா.சிவகுமார், துணைச் செயலாளராக சே.அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கொரோனா பேரிடர் காலத்தில் ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  “பணிகள் முடிந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருக்கும் அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையத்தில், 75 ஆவது சுதந்திர தினத்தன்று, வாலிபர் சங்கம் சார்பாக திறப்பு விழா  போராட்டம் நடத்துவது, அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும். அம்மாபேட்டையை தனி தாலுகாவாக அறிவித்திட வேண்டும். புதிதாக சார் பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் கட்டித்தர வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கிட வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள ஒன்றிய, மாநில அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.  இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்.56-ஐ ரத்து செய்து ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து, மீண்டும் 58 ஆக நிர்ணயம் செய்திட வேண்டும். இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணத்தை மாதம் ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செவிலியர்கள் மேம்பாட்டு  மாநில பயிற்சி வகுப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 29 - தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில மையம் சார்பில் சங்க பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை திருச்சி மத்திய  பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பிற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில தலைவர் சசிகலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரிய சாமி துவக்கவுரையாற்றினார். ‘இன்றைய காலக்கட்டத்தில் தொழிற் சங்கத்தின் அவசியம்’ என்ற தலைப்பில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் இந்திரா, ‘நம் எதிர் இருக்கும் சவால்களும் அதை எதிர் கொள்வதும்’ என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்க மாநில துணை  பொதுச் செயலாளர் வெங்கடேசன் பேசினர். சங்க மாநில பொதுச்செய லாளர் சுபின் நிறைவுரையாற்றினார். 

கரும்பு பயிரில்  பூச்சி தாக்குதல்

அம்மாபேட்டை, ஜூலை 29 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் பரவலாக சாகுபடி  செய்யப்பட்டுள்ள வெல்ல கரும்பு மற்றும் ஆலை கரும்பு ஆகிய வற்றில் ஆங்காங்கே மஞ்சள் நோய் மற்றும் மாவு பூச்சி தாக்குதல் காணப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி பூச்சியியல் பேராசிரியர் சோழன் மற்றும் நோயியல் பேராசிரியர் கார்த்தி கேயன் ஆகியோர் அய்யம்பேட்டை அருகே வீரமாங்குடி, சோமேஸ்வர புரம், மணலூர், கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் வெல்லம்  மற்றும் ஆலை கரும்பு வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர் பாதிக்கப் பட்ட கரும்பு பயிர் மாதிரிகளை சேகரம் செய்து பரிசோதனை கூடத்திற்கு  எடுத்துச் சென்றனர். 

புதிய பைப் லைன் அமைப்பு

மெலட்டூர், ஜூலை 29 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு  உட்பட்ட உதாரமங்கலம் கிராமத்தில் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில், 35 ஆண்டுகள் பழமையான குடிநீர் பைப் லைன்கள் அப்புறப் படுத்தப்பட்டு, புதிய பைப் லைன்கள்  பதிக்கப்பட்டன. தண்ணீர் அடைப்பால் அவதிப்பட்டு வந்த 150 குடும்பங் கள் இதனால் பயன் பெறும். புதிய பைப் லைன் பதிக்கும் பணியை  கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

எஸ்.ஐ.க்கு 2 ஆண்டு சிறை 

கும்பகோணம், ஜூலை 29 - தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் சீர்காழியைச் சேர்ந்த எல்.சிவக்குமார் (54) என்பவர் காவல் ஆய்வாளராக கடந்த 21.5.2011 ஆம்  ஆண்டு பணியாற்றி வந்தார். அப்போது ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டைச் சேர்ந்த ஜெயக்குமாரிடம், வழக்கு ஒன்றுக்கு சாதகமாக செயல்பட ஜெய குமாரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு, முன்பணமாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி  அரங்கராஜன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதை யடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்ட னையும் விதித்து தீர்ப்பளித்தார்.

போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு 

யத்தால் (ஐபிபிஎஸ்) வங்கித் துறை யில் காலியாக உள்ள 6,035 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு  முடித்திருக்க வேண்டும்.  இத்தேர்விற்கான முதல் நிலை தேர்வு 2022  ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் வாயிலாக, இந்த  வங்கி பணியாளர் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்பு ஆக.2 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடத்தப் படவுள்ளது.  இந்நிகழ்ச்சியில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுக்கு தயார் செய்யும் விதம், பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு  நடைபெறும். மேலும் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளும் இலவசமாக நடைபெறும். இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர் களைக் கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப் பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.  தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வங்கி பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு அலுவலக தொலைபேசி எண்ணை 04362-237037 தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள் ளார்.

மரக்கன்று நடல்

பாபநாசம், ஜூலை 29 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் பாபநாசம்  அருகே கோயில் தேவராயன்பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளா கத்தில் நெல்லி, மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள், அழகிற்காக குரோட்டன்ஸ் செடிகள் நடப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியை சுகன்யா, ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் பங்கேற்றனர்.

சிட்டி யூனியன் வங்கியின் 4 புதிய ஏ.டி.எம் திறப்பு

மன்னார்குடி, ஜுலை 29- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகரப் பகுதியில் சிட்டி  யூனியன் வங்கி சார்பில் புதிதாக 4 இடங்களில் ஏ.டி.எம் சேவை  மையங்கள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.       வட்டாட்சியர்  அலுவலகம் அருகில், ஏரிக்கரை, கீழ்கரை, பூப்பெட்டி உள்ளிட்ட 4  இடங்களில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் பேருந்து பயணியர் நிழல கத்துடன் இணைந்த ஏ.டி.எம் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த  மையங்களின் சிறப்பு நிகழ்ச்சியில் வங்கியின் துணை பொதுமேலா ளர் வெங்கடேஸ்வரன், மண்டல வளர்ச்சி மேலாளர் சதீஷ்குமார், கிளை  மேலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏரிக்கரை ஏ.டி.எம் மையத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராசேந்திரன் திறந்து வைத்தார்.

ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

அரியலூர், ஜூலை 29 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவ லக கூட்டமன்றத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  ஒன்றிய குழு தலைவர் காடுவெட்டி ரவிசங்கர்  தலைமை வகித்தார்.  ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர  சோழனுக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைக்க வேண்டும். ஆடி திருவாதிரை விழா நடத்த அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கட்டுமாவடியில் மின்னொளி கபாடி போட்டி

அறந்தாங்கி, ஜூலை 29 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கட்டுமாவடி இராமநாத சுவாமி  ஆலய  பெருந்திருவிழாவை முன்னிட்டு 18  ஆம் ஆண்டு ஆண்கள் சுழற்கோப்பைக்கான  கபாடி போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அணி கள் கலந்து கொண்டன. பல சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரம் ரூபாயும், 5 அடி  சுழற்கோப்பையும், 2-வது பரிசு பெற்ற  அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும், 4 அடி உயரம்  உள்ள சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 3 வது பரிசு பெற்ற அணிக்கு 10 ஆயிரம் ரூபா யும், 3 அடி உயரம் உள்ள சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 4 ஆம் பரிசு பெற்ற அணிக்கு  5 ஆயிரம் ரூபாயும், 3 அடி உயரம் உள்ள சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.\

உரங்களோடு இணைப்புப் பொருட்கள்: தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவாரூர், ஜூலை 29 -  திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை குறுவை நெல் நேரடி விதைப்பில்  33,605 ஏக்கரிலும், இயல்பான நடவு முறை யில் 23,355 ஏக்கரிலும், செம்மை நெல் சாகுபடி  முறையில் 79,128 ஏக்கரிலும் என மொத்தம்  1,36,88 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள் ளது. மேலும் 513 ஏக்கரில் நாற்றங்கால் விடப் பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்  மூலம் 1,852 மெ.டன் யூரியா, 1,392 மெ.டன்  டிஏபி, 1,116 மெ.டன் பொட்டாஷ் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  குறுவை பருவ சாகுபடிக்குத் தேவை யான உரமிடும் பணிகள் விவசாயிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவ தால், தங்களது உரத் தேவையினை பூர்த்தி  செய்திட தனியார் உரக் கடைகளிலும் உரங் களைப் பெற்று வருகின்றனர். அவ்வாறு விவ சாயிகள் தனியார் உரக்கடைகளை அணு கும் போது, எக்காரணம் கொண்டும் அதனுடன் மற்ற வேளாண் இடுபொருட்கள் இணைப்பு பொருளாக வாங்குவதற்கு கட்டா யப்படுத்தக் கூடாது. மீறினால் உரக் கட்டுப் பாடு ஆணை 1985-ன் படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் நூதனப் போராட்டம் அறிவிப்பு

பொன்னமராவதி, ஜூலை 29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி யில் 12 ஓ.எச்.டி ஆபரேட்டர்களுக்கு 41 மாத  சம்பள பாக்கி விவகாரத்தில் பேச்சுவார்த்தை  முடிவுகளை அமல்படுத்த உரிய நடவடிக்கை கள் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித் தும், இதில் தமிழக அரசு உரிய நடவடிக் கைகள் எடுக்க வேண்டும்.   சம்பளம் வழங்காத ஊராட்சிக்கு நிதி  அளிக்க, ஆலவயலில் இருந்து பொன்னமரா வதி வரை நடந்தே சென்று பிச்சை எடுக்கும் போராட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி  நடத்தப்படும் என புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) அறிவித்துள்ளது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் ஆலவயல் சங்கர் தலை மையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தில் மேற்கண்ட முடிவு அறிவிக் கப்பட்டது. மாவட்டத் தலைவர் கே.முகமது அலி ஜின்னா, நிர்வாகிகள் திருக்களம்பூர் சந்திரன் மற்றும் தீன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

50 சதவீத மானியத்தில் சம்பா  பருவ விதை நெல் விநியோகம் வேளாண் அதிகாரி தகவல்

கும்பகோணம், ஜூலை 29- தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் வட்டார வேளாண் மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவையான சம்பா பருவ விதை நெல் விரிவாக்க மையங்கள் மூலம்  50 சதவீத மானியத்தில் விநியோகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் மற்றும் விதை கிராம திட்டத்தின் மூலம் 50 சதவீத மானிய விலை யில் சம்பா பருவ  சாகுபடிக்கு தேவையான நெல் விதை கள் விநியோகம் வேளாண்மை விரிவாக்க மையங்க ளான திருப்பனந்தாள், அணைக்கரை, பந்தநல்லூர், கஞ்சனூர் ஆகிய இடங்களில் சம்பா பருவத்திற்கு உகந்த விதை நெல் ரகங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆடுதுறை 51, திருச்சி-3, பிபிடி 5204 (பப்பட்லா), சிஆர் 1009, டது. சிஓஆர் 50 ஆகிய நெல் ரகங்கள் இருப்பு உள்ளன. இதில் ஆடுதுறை 51, 155 முதல் 160  நாள் வயதுடைய நீண்டகால சன்ன ரகம் . பூச்சி மற்றும்  நோய் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்டது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் விதை கிராம  திட்டத்தின் மூலம் 50 சதவீத மானிய விலையில் விவ சாயிகளுக்கு இந்நெல் வகைகள் விநியோகிக்கப் படும்.  எனவே, சம்பா, தாளடி சாகுபடி செய்யும் விவ சாயிகள் தங்களது பகுதியில் உள்ள உதவி வேளாண்மை  அலுவலர்களை தொடர்பு கொண்டு வேளாண்மை துறையின் பரிந்துரையின் பேரில் வேளாண்மை விரி வாக்க மையங்களில் விதை நெல் பெற்றுக் கொள்ள லாம்.