பெரம்பலூர், நவ.19 - தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராக பெரம்பலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் எழுத்தா ளர் இரா.எட்வின்-ஐ பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். 30.11.2023 அன்று நடைபெறும் முதல் கூட்டத்தில் எழுத்தாளர் இரா.எட்வின் பொறுப்பேற் கிறார். கவிஞர் எட்வினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மக்களுக்கான மருத்து வர் கழகம் மாநிலச் செயலாளர் டாக்டர் சி.கரு ணாகரன், இந்திய தொழிற்சங்க மையம் மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்திவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் இராமகிருஷ்ணன், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் கலையரசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், வாலிபர் சங்க மாநில பெண்கள் உபகுழு உறுப்பினர் பிரியா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.