districts

img

‘இந்தியா’ கூட்டணிக்கு நீங்கள் போடும் ஓட்டு; அதுதான் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு

தஞ்சாவூர்/கரூர், ஏப்.5-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை தபால் நிலையம் அருகே, வெள்ளிக்கிழமை காலை, தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ச. முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: உதயசூரியன் சின்னத்தில் ஏப்.19  அன்று, நமது வேட்பாளர் முரசொ லிக்கு நீங்கள் போடும் ஓட்டு. அது தான் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2021 சட்டமன்ற தேர்த லில் இத்தொகுதி வேட்பாளர் அண்ணா துரை அவர்களுக்காக பிரச்சாரம் செய்தேன். அவருக்கு கிட்டத்தட்ட 25,300 வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெ ரிய வெற்றியைத் தேடித் தந்தீர்கள். அதற்கு நன்றி.  இந்த சட்டமன்றத் தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்துள்ள  சில பணிகளை மட்டும் குறிப்பிடு கிறேன். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்  திட்டத்தின் மூலம் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் காசங்குளம், வடகரை யில் கொண்டு வரப்பட்ட புதிய  தினசரி சந்தை கட்டிடம் மக்கள் பயன் பாட்டிற்கு  திறந்து விடப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட 9  கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு பணிகள்  நிறைவடைந்துள்ளன. மதுக்கூர் கண்ணனாறு மேல்மட்ட பாலப் பணிகள் ரூ.13 கோடியில் நடை பெற்று வருகின்றன. மக்களுடைய கோரிக்கையை ஏற்று அதிராம்பட்டி னம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தியதோடு ரூ.31 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப் பட்டு வருகிறது.  கொப்பரை கொள்முதல்  செய்ய நடவடிக்கை பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், தேசிய வேளாண் கூட்டு றவு நிறுவனத்தின் மூலம் அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொப்பரை தேங்காய்களை கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ரூ.20 கோடி மதிப்பீட் டில் பட்டுக்கோட்டை நரியம் பாளை யத்தில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் படும். பட்டுக்கோட்டை நயினாங்குளம் உரக்கிடங்கில் ரூ.25 கோடி மதிப்பீட்டில்  10 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைக்கப்படும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுமார் ரூ.10 கோடியில் நடைபெற்று வரும் தாய்-சேய் நல மருத்துவமனை கட்டி டம் விரைவில் மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும். பட்டுக் கோட்டை ரயில் வழித்தடத்தில் கம்பன்  எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப் படும். பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைக்கப்படும். பட்டுக்கோட்டை பைபாஸ் இரண்டாம்  கட்டப் பணிகள் விரைந்து முடிக்கப் படும். ரூ.70 கோடியில் மல்லிப்பட்டி னத்தில் தூண்டில் வளைவு அமைக்கப் படும்.   இவ்வாறு அவர் பேசினார்.