districts

img

தரங்கம்பாடியில் தமிழறிஞர் சீகன்பால்கு வாழ்க்கை வரலாற்று ஒளி, ஒலி நாடகம்

மயிலாடுதுறை, ஜூலை 25 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி டி.இ.எல்.சி ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் தமிழறிஞர் சீகன் பால்குவின் வாழ்க்கை வரலாற்று ஒளி,  ஒலி நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு   நடைபெற்றது. கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற் காக டென்மார்க் மன்னரால் தரங்கம் பாடிக்கு அனுப்பப்பட்ட ஜெர்மனி நாட்ட வரான தமிழறிஞர் சீகன்பால்கு மதத்தை  பரப்பும் பணியை மட்டும் செய்யாமல், ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் மொழியை இந்தியாவிலேயே முதன் முதலில் இயந்திரத்தின் மூலம் காகிதத் தில் அச்சேற்றினார். மேலும், பழமை யான தமிழ் நூல்களை காகிதத்தில் அச்சேற்றி அழகு பார்த்தார்.  தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டதோடு ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்கள், விதவைகளுக்காக பல்வேறு உதவிகளை செய்து அவர்க ளின் முன்னேற்றத்திற்காகவும், ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே போ ராட்டங்களை நடத்தினார் சீகன்பால்கு. இவரது வாழ்க்கை வரலாற்றை பலரும் அறிந்து கொள்ளும் வகையில், சீகன் பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினத்தையொட்டி புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ஜோ. அருள் பிரகாஷ் தலைமையில் “அர சவை அருள்தொண்டர்” என்ற தலைப் பில் சென்னை லுத்தரன் கலைக் குழுவி னரால் பிரம்மாண்ட மேடையில் ஒளி, ஒலி நாடகம் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி க்கு புதிய எருசலேம் ஆலய ஆய ரும், மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நாடகத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச் சபையின் பேராயர் டேனியல் ஜெய ராஜ், மறைமாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிரகாம், ஆயர் டாக்டர்  கிறிஸ்டியான் சாம்ராஜ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி  மற்றும் திருச்சபை கல்வி நிறுவனங் களின் முதல்வர்கள், தலைமையாசிரி யர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தி ருந்து நாடகத்தை பார்த்து ரசித்தனர். நாடக கலைஞர்கள், அரசவை அருட் தொண்டர் என்ற தலைப்பில் சீகன்பால் குவின் வரலாற்றை நாடகமாக நடித்துக்  காட்டிய 41 கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஞாயி றன்று சீகன்பால்குவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த னர். சீகன்பால்குவிற்கு மணிமண்ட பத்தை திமுக அரசு நிச்சயம் அமைக்கும்  என சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் உறுதியளித்தார்.