திருச்சிராப்பள்ளி, பிப்.13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்ற டைவதை உறுதிசெய்ய வேண்டு மென்ற உன்னத நோக்கத்தின் அடிப்ப டையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பயனாளி சங்கர் கூறுகையில், “கண்ணனூர் பாளையம் எனது ஊரா கும். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின்கீழ் நடத்தப் பட்ட முகாமில் மனு கொடுத்தேன். எனது கால்கள் ஊனமுற்றுள்ளதால் வெளியே சென்று வர மிகுந்த சிரமப்பட் டேன். இந்த முகாமில் ஆட்சியரிடம் மூன்று சக்கர வாகனம் வேண்டி விண் ணப்பித்து மனு கொடுத்தேன். என்னி டம் பெற்றுக் கொண்ட மனு மீது உட னடியாக நடவடிக்கை எடுத்து இம்முகா மிலேயே மூன்று சக்கர வாகனம் வழங் கினார். இத்தகைய முகாம் நடத்த உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார். பயனாளி அருணாவதி கூறுகை யில், “கண்ணனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு மேல் மின்சார கம்பி ஆபத்தான முறையில் இருப்பதால், அதனை மாற்ற பலமுறை முயற்சி செய்தும் வேலை நடக்க வில்லை. இதனால், நான் துறையூரில் நடந்த முகாமில் மனு கொடுத்தேன். என்னுடைய மனுவை பெற்றுக் கொண்டு மின்சாரத் துறையினர் உடனே நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டு, எங்க ளது நீண்ட நாள் கோரிக்கையை இம் முகாம் தீர்த்து வைத்துள்ளது. இதற்கு உதவியாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி” என்றார். பயனாளி அகிலா கூறுகையில், “நான் கண்ணனூர் கிராமத்தில் பல வருடமாக வசித்து வருகிறேன். எங்க ளுக்கு சொந்தமாக மனை இருந்தும் அதற்கான வீட்டுமனை பட்டா பெற முடியாமல் இருந்தோம். இந்நிலை யில், இந்த முகாமில் வீட்டுமனை பட்டா வேண்டி மனு கொடுத்தேன். உட னடியாக என் மனு பரிசீலிக்கப்பட்டு பட்டா வழங்க உத்தரவிட்டனர். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் எனக்கு இந்த உதவி கிடைத்துள்ளது. அதற்கு காரணமான தமிழ்நாடு முதல மைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் நன்றி” என்றார்.