districts

img

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

பாபநாசம், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மோனிகா 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய  வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித் திட்ட தேர்வில் வெற்றி பெற்றார்.  இதற்காக அவருக்கும், அதற்கு உறு துணையாக இருந்த  வகுப்பு ஆசிரியர்களுக்கும் பாபநாசம் நகர கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் பாபநாசம் நகர கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி  ராஜேந்திரன், துணைச் செயலர் கார்த்திக், பொருளாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மாணவி மோனிகாவிற்கு பொன் னாடைப் போர்த்தி, பேனாவை பரிசாக வழங்கினர்.