districts

img

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் சனிக்கிழமையன்று அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கொடிசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன்  மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாணவ, மாணவியர்கள், வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.