districts

img

சிலம்பம் போட்டி

கும்பகோணம், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.  போட்டியினை கார்த்திக் வித்யாலயா பள்ளி தாளாளர் எஸ்.ஏ கார்த்திகேயன் துவக்கி வைத்தார். பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.