தஞ்சாவூர், ஜூலை 27-
சாதிச் சான்றிதழ் கேட்டு இந்து ஆதி யன் இன பழங்குடியின மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாழனன்று முற்றுகையிட்டனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, பூண்டி அண்ணா நகர்ப் பகுதி யைச் சேர்ந்த பழங்குடி இன மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாதிச்சான்றிதழ் கேட்டு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறுநாள் வேலை அட்டை, பள்ளி பாடப் புத்தகங்கள், நல வாரிய அட்டை, வீட்டு மனைப் பட்டா ஆகியவற்றை ஒப்படைத்து, முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, போராட்டத்தில் ஈடு பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்மணி சாந்தி கூறுகையில், “ஆதியன் பழங்குடியினச் சாதி சான் றிதழ் வழங்கக் காலதாமதம் செய்வ தால், அரசு வழங்கிய அனைத்து ஆவ ணங்களையும் ஆட்சியரிடம் ஒப்ப டைக்க வந்தோம்.
நாங்கள் பூண்டி, அண்ணா நகர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நிரந்தரமாகக் குடியிருந்து வருகிறோம். நாங்கள் இந்து ஆதியன் என்ற பழங் குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். நான் சிறுவயதில் பள்ளியில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே ஆதியன் சாதிச் சான்றிதழ் கேட்டுப் பலமுறை ஆட்சி யரிடம் மனுக் கொடுத்துச் சலித்து விட்டோம். தற்போது நான் எனது குழந்தைகளுக்காகவும், என்னைப் போன்ற மற்ற எங்கள் இன மக்கள், பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் சான்றிதழ் கேட்கி றோம் ஆனால், சான்றிதழ் வழங்க மறுக் கின்றனர்
எங்களுக்கு அரசு வழங்கிய அனைத்து ஆவணங்களும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலை அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, நலவாரிய அடையாள அட்டை, நாங் கள் பெற்ற சாதிச் சான்றிதழ், பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகம் அனை தையும் திருப்பி ஒப்படைக்க முடிவு செய்தோம் என்றார்.
போராட்டம் நடத்தியவர்களுடன், தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல், பாபநாசம் வட்டாட்சி யர் பூங்கொடி, வல்லம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, காவல்துறை வாக னத்தில், போராட்டம் நடத்தியவர் களைக் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.