தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 40 டியூப் லைட்டுகள் வழங்கப்பட்டன. விவேகானந்தா சமூக கல்வி சங்கத் தலைவர் தேவராசன், பள்ளித் தலைமையாசிரியர் மணியரசனிடம் டியூப் லைட்டுகளை வழங்கினார். இதில் சங்க உறுப்பினர் சிவக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.