districts

img

டெஸ்ட் பர்ச்சேஸ் முறை வணிகர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி மனு

மயிலாடுதுறை, நவ-30,  டெஸ்ட் பர்சேஸ் முறை, வாகன சுற்றாய்வு தணிக்கை நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி வணிகர்கள் செவ்வாயன்று மனு அளித்தனர். வணிக வரித்துறையினர் சில்லரை கடைகளில் ‘‘டெஸ்ட்  பர்ச்சேஸ்’’ என்ற பெயரில்  பொருள்களை வாங்கி,  அதற்கு ரசீது அளிக்கப்பட வில்லை என அபராதம் விதிக்  கும் முறை மற்றும் வாகன சுற்றாய்வு தணிக்கை நட வடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டுமென வலி யுறுத்தி மயிலாடுதுறையில் உள்ள வணிகர்கள் பேரணி யாக சென்று மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். மயிலாடுதுறை காவேரி நகர் எல்ஐசி அலுவலகம்  முன்பு தொடங்கிய பேர ணிக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் ஏ. தமிழ்ச்செல்வன், மயிலாடு துறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செல்வம் ஆகி யோர் தலைமை வகித்தனர். வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாவட்டப் பொறுப்பா ளர்கள் மதியழகன், துரை, நவநீதன், சேம்பர் ஆஃப் காமர்ஸ்  பொறுப்பாளர்கள் புலவர் செல்வம், என்.மோகன்ராஜ், சுவாமிநாதன், சிவலிங்கம், அக்பர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். போராட்டத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள கடை கள் காலை 10 மணி முதல்  11 மணி வரை அடைக்கப் பட்டன. தொடர்ந்து, காவேரி  நகர் எல்ஐசி அலுவலகத்தி லிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட வாறு, பேரணியாக மயிலாடு துறை மாவட்ட வணிகவரித் துறை அலுவலகம் நோக்கி  சென்று, அங்கு கோரிக்கை கள் அடங்கிய மனுவை அளித்தனர்.  வர்த்தக சங்க முன்னாள் பொறுப்பாளர்கள் எம்.என். ரவிச்சந்திரன், ஏஆர்சி  அசோக், சி.செந்தில்வேல் மற்றும் சீர்காழி, கொள்ளி டம், செம்பனார்கோவில், குத்தாலம், திருவாலங்காடு உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.