districts

img

வாலிபர் கொலை 4 பேர் கைது

புதுக்கோட்டை, ஏப்.17-  புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசலை சேர்ந்தவர் ராசாத்தி (38). இவ ரது கணவர் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த முருகேசன் (40).  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கண வருடன் ஏற்பட்ட குடும்ப தகராறினால் 2 மகன்களுடன் ராசாத்தி அன்னவாசலில் கடந்த சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், அன்னவாசலை சேர்ந்த  முத்துக்குமாருக்கும் (30), ராசாத்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதையறிந்த ராசாத்தியின் மூத்த மகன் வெற்றிவேல் (17), இரண்டு தினங்க ளுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வெற்றிவேல் இறப்புக்கு முத்துக்குமார் தான் காரணம் எனக் கருதிய, முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமார் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். இதில் ஆத்திர மடைந்த முருகேசன் மற்றும் அவரது உற வினர்கள் முத்துக்குமாரை அரிவாள், கத்தி  உள்ளிட்டவற்றை கொண்டு வெட்டி விட்டு  அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

 இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்  குமாரை அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  வழியிலேயே முத்துக்குமார் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்குப்  பதிவு செய்த அன்னவாசல் காவல்துறை யினர் ராசாத்தி (38), பாலாமணி (40), அன்ன பூரணி (33), சந்தோஷ்குமார் (13) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் முரு கேசன் (40). சண்முகம் (35). நாகராஜ் (29)  உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

சாலை மறியல்

முத்துக்குமாரை கொலை செய்தவர் களை உடனே கைது செய்ய வேண்டும் என  கூறி முத்துகுமாரின் உறவினர்கள் 200-க்கும்  மேற்பட்டோர் புதுக்கோட்டை இலுப்பூர் சாலையில் அன்னவாசல் பேருந்து நிலை யம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் ரமேஷ், இலுப்பூர் துணக் கண்காணிப்பாளர் காயத்திரி, காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொட ர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.