திருநெல்வேலி அக் 2- நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் பணி செய்த இளம் பெண் கடையில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் திருப் பணிகரைசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் .இவரது மூன்றாவது மகள் சந்தியா (18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்தார். திங்கள் கிழமையன்று கடைக்கு தேவை யான பொருட்களை குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பா ததால் சந்தேகம் அடைந்த உடன் பணி செய்யும் நபர்கள் குடோனுக்கு சென்று பார்த்தனர்.அப்போது ரத்த வெள்ளத்தில் சந்தியா கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத னைத் தொடர்ந்து நெல்லை டவுன் போலீஸாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சந்தியாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவண குமார் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தர விட்டுள்ளார்.