நாகர்கோவில், ஆக.23
குமரி மாவட்டத்தில் இருந்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும் காலை மாலை என தேசிய நெடுஞ்சாலை உட்பட குமரி மாவட்டத்தின் முக்கிய சாலை கள் வழியாக தினமும் கேரளாவுக்கு கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு கனரக வாக னங்கள் அதிவேகமாக செல்கின்றன. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
புதன்கிழமை காலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் போது, தேவிகோடு பகுதியை சேர்ந்த விஜு (வயது 40) தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தார். திருவரம்பு ரோட்டில் நாகக்கோடு பகுதியில் அவர்கள் வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியது. இதில் இரு சக்கர வாகனம், லாரியின் முன் பக்கத்தில் சிக்கி கொண்டது. விஜூவும் அவரது மனைவி யும் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அந்தப் பகுதி யில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் டாரஸ் லாரியை மடக்கி பொது மக்கள் சிறைபிடித்தார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததும் குலசேகரம் காவ லர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், தினமும் காலை மாலை பள்ளி- கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரங்களில் கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். இல்லை யென்றால் கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.