districts

img

காரடைக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது

புதுக்கோட்டை, பிப்.29-  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரடைக்கன்பட்டியில் அரசு மது பானக்கடை திறக்கக்கூடாது என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இலுப்பூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, ராஜாளிப்பட்டி ஊராட்சிக்கு உட் பட்ட காரடைக்கன்பட்டியில் அரசு மதுபானக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது. இந்தப் பகுதியில் டாஸ் மாக் கடை திறந்தால் பொதுமக்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.  இந்நிலையில், மேற்படி காரடைக்கன் பட்டியில் அரசு மதுபானக்கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி இலுப்பூரில் வியா ழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் விராலிமலை ஒன்றியச் செயலாளர் என்.மாலிங்கம் தலைமை வகித்தார். பி.அடைக்கலம், என்.கோபால், பி.அழகர், சி.பன்னீர்செல்வன், பி.நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், துரை.நாரா யணன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். கே.எம்.சங்கர், ஏ.பழனிச்சாமி, ஏ.சிவக் குமார், எம்.லெட்சுமி, எம்.சண்முகம், ஏ.இரு தயம், ராஜா, ஆர்.முருகன் ஆகியோர் பேசினர்.