districts

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம்: சாலை, குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை

மயிலாடுதுறை, அக்.5 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர்  சுகுணா சங்கரி தலைமை வகித்தார். துணைத்  தலைவர் பொன்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பூபதி. கமலக் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது: ஆனந்தி: 5வது வார்டில் வ.உ.சி தெரு வில் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்த் தொற்று அபாயம் உள்ளது.  தண்ணீர் தேங்காமல் இருக்க சாலையை சீரமைக்க வேண்டும். பாரதியார் வீதியில் 25 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு கூடுதலாக குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும். ஜோன்செல்லப்பா: 9-வது வார்டில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், தரமான கொசு மருந்துகளை பயன்படுத்தி கொசுக்களை அழிக்க வேண்டும். பேரூ ராட்சி பகுதிகளில் ஏராளமான குரங்குகள்  வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை யும்  பொதுமக்களையும் அச்சுறுத்தி வரு கின்றன. இதனை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் அவ்வப் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படு கிறது. அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவம் நடப்பதால் கண்கா ணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அனார்கலி: 16-வது வார்டில் சாலை வசதி  ஏற்படுத்த வேண்டும். இந்த பகுதியில் வெறி  நாய்கள் சுற்றி திரிந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரு கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். சுந்தரமூர்த்தி: 17-வது வார்டு மரகத காலனி யில் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத  நிலையில்  உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும். பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலக ஊழியர்கள், மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று  பேசினார். பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கர்  பேசுகையில், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதி யில் உள்ள 18 வார்டுகளில் மக்களை சந்தித்து  சாலை மற்றும் குடிநீர் பிரச்சனை விரைவில்  சீர் செய்து தரப்படும் என்றார்.

;